All themes
Theme

Justice

30 Kurals on Justice.

Kural · 111
Ch 12 — Impartiality
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

“Being fair means treating friends, strangers, and people you dislike with equal care. This goodness matters when you practice it with everyone.”

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

JusticeEthics
Kural · 112
Ch 12 — Impartiality
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

“Wealth built through fairness lasts and gives security to future generations.”

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

JusticeEthics
Kural · 113
Ch 12 — Impartiality
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

“Give up any gain that comes from unfair treatment right away. Do this even if it seems to bring only good.”

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

JusticeEthics
Kural · 114
Ch 12 — Impartiality
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

“Whether someone lived with integrity or abandoned fairness becomes clear through what they leave behind — the lasting reputation, the praise or blame that endures after them.”

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

JusticeEthics
Kural · 115
Ch 12 — Impartiality
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

“Loss and gain are inevitable parts of life. The true mark of wisdom is maintaining inner balance and steadiness through both prosperity and adversity.”

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

JusticeEthics
Kural · 116
Ch 12 — Impartiality
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

“When you start thinking of acting unfairly, take it as a warning. You are heading toward trouble in your own life.”

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

JusticeEthics
Kural · 117
Ch 12 — Impartiality
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

“People respect someone who stays fair and does what is right. Having little money does not make that person worth less.”

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

JusticeEthics
Kural · 118
Ch 12 — Impartiality
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

“Wise people judge fairly, like a balance scale that weighs things evenly. They do not lean toward one side out of personal preference.”

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

JusticeEthics
Kural · 119
Ch 12 — Impartiality
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

“Truly fair words come from a mind that does not take sides. Fairness means keeping both your thoughts and your words fair.”

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

JusticeEthics
Kural · 120
Ch 12 — Impartiality
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

“Good business means caring for other people's goods as your own. Deal honestly with what others trust you to handle.”

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

JusticeEthics
Kural · 541
Ch 55 — The Right Sceptre
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

“Find out what went wrong without taking anyone’s side. Then carefully decide what action is fair, whoever is involved.”

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

LeadershipGovernanceJustice
Kural · 542
Ch 55 — The Right Sceptre
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.

“Just as the world depends on rain from the sky, a people depend on the just rule of their leaders. Fairness is the climate everything else grows in.”

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

LeadershipGovernanceJustice
Kural · 543
Ch 55 — The Right Sceptre
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

“A ruler's just governance forms the foundation that allows spiritual learning and ethical practice to flourish in society. Without the stability and fairness provided by righteous authority, neither wisdom nor virtue can truly take root.”

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

LeadershipGovernanceJustice
Kural · 544
Ch 55 — The Right Sceptre
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

“People stand by a ruler who treats them with care and fairness. Such a ruler earns respect far beyond their own land.”

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

LeadershipGovernanceJustice
Kural · 545
Ch 55 — The Right Sceptre
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

“Fair rule helps a country thrive, like timely rain helping crops grow. Good government supports a better life for its people.”

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

LeadershipGovernanceJustice
Kural · 546
Ch 55 — The Right Sceptre
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

“A ruler's success comes from fair rule, not from weapons. That rule must stay fair and help people live well.”

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

LeadershipGovernanceJustice
Kural · 547
Ch 55 — The Right Sceptre
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

“A ruler protects the people under their care. If the ruler stays fair, that fairness protects the ruler too.”

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

LeadershipGovernanceJustice
Kural · 548
Ch 55 — The Right Sceptre
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

“A ruler must be easy to approach, examine complaints, and act fairly. Without this, the ruler can fall even without an enemy.”

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

LeadershipGovernanceJustice
Kural · 549
Ch 55 — The Right Sceptre
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

“A ruler must protect people from harm, including harm from the ruler. Giving suitable punishment for crimes is a duty, not a disgrace.”

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

LeadershipGovernanceJustice
Kural · 550
Ch 55 — The Right Sceptre
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

“The couplet compares a ruler's death penalty for cruel crimes to pulling weeds. The purpose is to protect people, just as weeding protects crops.”

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

LeadershipGovernanceJustice
Kural · 551
Ch 56 — The Cruel Sceptre
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

“A ruler who keeps hurting people and treating them unfairly is crueler than someone who lives by killing.”

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

GovernanceJustice
Kural · 552
Ch 56 — The Cruel Sceptre
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

“A ruler who uses power to demand people's money acts like an armed robber. What sounds like a request becomes a threat.”

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

GovernanceJustice
Kural · 553
Ch 56 — The Cruel Sceptre
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

“A ruler must check for problems and act fairly every day. Without this care, the country gets worse day by day.”

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

GovernanceJustice
Kural · 554
Ch 56 — The Cruel Sceptre
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

“A government that acts harshly without thinking loses money and people's respect. Unfair rule harms both at the same time.”

(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

GovernanceJustice
Kural · 555
Ch 56 — The Cruel Sceptre
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

“When a ruler's cruelty becomes unbearable, people cry in pain. Their suffering can wear away the ruler's wealth and power.”

(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

GovernanceJustice
Kural · 556
Ch 56 — The Cruel Sceptre
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

“Rulers earn lasting respect by treating people fairly. Without fair rule, their good name will not last.”

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

GovernanceJustice
Kural · 557
Ch 56 — The Cruel Sceptre
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

“People suffer under a ruler without kindness, just as the world suffers without rain.”

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

GovernanceJustice
Kural · 558
Ch 56 — The Cruel Sceptre
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

“Under an unfair ruler, having wealth can hurt more than being poor.”

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

GovernanceJustice
Kural · 559
Ch 56 — The Cruel Sceptre
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

“The couplet warns that unfair rule brings failed rains. Its deeper explanation shows how ruined water storage wastes the rain that falls.”

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

GovernanceJustice
Kural · 560
Ch 56 — The Cruel Sceptre
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

“When rulers fail to protect people, work that supports life suffers. Important jobs and learning can fade as a result.”

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

GovernanceJustice
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.