Library · 1,330 Kurals

Kural Library

All 1,330 Kurals · verified text

Kural · 1
Ch 1 — The Praise of God
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

“As the letter A begins the alphabet, the eternal, foundational Source begins the world: everything that exists rests on a first principle.”

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

EthicsLearning
Kural · 2
Ch 1 — The Praise of God
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

“What is the use of all one's learning if one does not humbly acknowledge and honour those of greater wisdom and purity of understanding?”

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

EthicsLearning
Kural · 3
Ch 1 — The Praise of God
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

“Those who hold close to the sacred feet of the One who dwells in the flower of the heart will flourish with lasting joy in this world.”

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

EthicsLearning
Kural · 4
Ch 1 — The Praise of God
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

“To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come”

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

EthicsLearning
Kural · 5
Ch 1 — The Praise of God
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

“Those who truly understand and embrace the essence of the divine will not be bound by the dual forces of good and evil karma that arise from ignorance.”

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

EthicsLearning
Kural · 6
Ch 1 — The Praise of God
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

“Those who follow the truthful, disciplined path of the Divine—who has mastered the five senses—will live a life of enduring meaning and prosperity.”

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

EthicsLearning
Kural · 7
Ch 1 — The Praise of God
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

“Only those who anchor themselves to something incomparable — a truth larger than themselves — can free their minds from anxious worry.”

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

Self-ControlEthics
Kural · 8
Ch 1 — The Praise of God
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

“None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue”

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

EthicsLearning
Kural · 9
Ch 1 — The Praise of God
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

“The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation”

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

EthicsLearning
Kural · 10
Ch 1 — The Praise of God
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

“Being born again and again is compared to a vast sea. The verse says only those who stay close to God can cross it.”

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

EthicsLearning
Kural · 11
Ch 2 — The Blessing of Rain
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

“By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia”

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

Compassion
Kural · 12
Ch 2 — The Blessing of Rain
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

“Rain produces good food, and is itself food”

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

Compassion
Kural · 13
Ch 2 — The Blessing of Rain
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

“If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world”

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

Compassion
Kural · 14
Ch 2 — The Blessing of Rain
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

“If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease”

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

Compassion
Kural · 15
Ch 2 — The Blessing of Rain
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

“Rain by its absence ruins men; and by its existence restores them to fortune”

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

Compassion
Kural · 16
Ch 2 — The Blessing of Rain
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

“If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen”

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது

Compassion
Kural · 17
Ch 2 — The Blessing of Rain
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

“Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)”

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்

Compassion
Kural · 18
Ch 2 — The Blessing of Rain
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

“If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials”

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது

Compassion
Kural · 19
Ch 2 — The Blessing of Rain
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

“If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world”

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

Compassion
Kural · 20
Ch 2 — The Blessing of Rain
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

“If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water”

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

Compassion
Kural · 21
Ch 3 — The Greatness of Ascetics
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

“The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire”

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

Self-ControlEthics
Kural · 22
Ch 3 — The Greatness of Ascetics
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

“To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead”

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

Self-ControlEthics
Kural · 23
Ch 3 — The Greatness of Ascetics
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

“The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)”

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

Self-ControlEthics
Kural · 24
Ch 3 — The Greatness of Ascetics
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

“He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven”

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

Self-ControlEthics
Kural · 25
Ch 3 — The Greatness of Ascetics
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

“Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses”

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்

Self-ControlEthics
Kural · 26
Ch 3 — The Greatness of Ascetics
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

“The great will do those things which is difficult to be done; but the mean cannot do them”

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

Self-ControlEthics
Kural · 27
Ch 3 — The Greatness of Ascetics
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

“The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell”

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

Self-ControlEthics
Kural · 28
Ch 3 — The Greatness of Ascetics
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

“The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world”

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

Self-ControlEthics
Kural · 29
Ch 3 — The Greatness of Ascetics
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

“The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted”

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

Self-ControlEthics
Kural · 30
Ch 3 — The Greatness of Ascetics
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

“The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness”

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

Self-ControlEthics
Showing 30 of 1,330
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.