All themes
Theme

Love

50 Kurals on Love.

Kural · 51
Ch 6 — The Worth of a Wife
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

“A true life partner is one who embodies the virtues suited to home life and manages the household wisely according to the family's financial means.”

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

FamilyLove
Kural · 52
Ch 6 — The Worth of a Wife
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

“If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing”

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

FamilyLove
Kural · 53
Ch 6 — The Worth of a Wife
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

“If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?”

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

FamilyLove
Kural · 54
Ch 6 — The Worth of a Wife
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

“What is more excellent than a wife, if she possess the stability of chastity ?”

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

FamilyLove
Kural · 55
Ch 6 — The Worth of a Wife
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

“If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain”

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

FamilyLove
Kural · 56
Ch 6 — The Worth of a Wife
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

“She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame”

கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

FamilyLove
Kural · 57
Ch 6 — The Worth of a Wife
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

“What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity”

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

FamilyLove
Kural · 58
Ch 6 — The Worth of a Wife
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

“If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish”

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

FamilyLove
Kural · 59
Ch 6 — The Worth of a Wife
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

“The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them”

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

FamilyLove
Kural · 60
Ch 6 — The Worth of a Wife
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

“The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness”

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

FamilyLove
Kural · 71
Ch 8 — The Possession of Love
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

“Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within”

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

LoveFamilyCompassion
Kural · 72
Ch 8 — The Possession of Love
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

“Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others”

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

LoveFamilyCompassion
Kural · 73
Ch 8 — The Possession of Love
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

“They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)”

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

LoveFamilyCompassion
Kural · 74
Ch 8 — The Possession of Love
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

“Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship”

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

LoveFamilyCompassion
Kural · 75
Ch 8 — The Possession of Love
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

“These are the fruits of tranquil life of love”

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்

LoveFamilyCompassion
Kural · 76
Ch 8 — The Possession of Love
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

“The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice”

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது

LoveFamilyCompassion
Kural · 77
Ch 8 — The Possession of Love
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

“Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms”

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

LoveFamilyCompassion
Kural · 78
Ch 8 — The Possession of Love
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

“The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert”

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

LoveFamilyCompassion
Kural · 79
Ch 8 — The Possession of Love
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

“Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member”

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

LoveFamilyCompassion
Kural · 80
Ch 8 — The Possession of Love
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

“A life lived in love is genuinely alive; without love, the body is merely bones wrapped in skin.”

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்

LoveFamilyCompassion
Kural · 1081
Ch 109 — The Pre-marital love
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

“Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed”

தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

Love
Kural · 1082
Ch 109 — The Pre-marital love
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

“This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me”

நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

Love
Kural · 1083
Ch 109 — The Pre-marital love
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

“I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities”

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது

Love
Kural · 1084
Ch 109 — The Pre-marital love
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

“These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity”

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

Love
Kural · 1085
Ch 109 — The Pre-marital love
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

“Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?”

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

Love
Kural · 1086
Ch 109 — The Pre-marital love
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

“Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows”

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

Love
Kural · 1087
Ch 109 — The Pre-marital love
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

“The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant”

மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

Love
Kural · 1088
Ch 109 — The Pre-marital love
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

“On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless”

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

Love
Kural · 1089
Ch 109 — The Pre-marital love
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

“Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?”

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

Love
Kural · 1090
Ch 109 — The Pre-marital love
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

“Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at”

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

Love
Kural · 1091
Ch 110 — Recognition of the Signs
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

“There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof”

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

Love
Kural · 1092
Ch 110 — Recognition of the Signs
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

“A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)”

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

Love
Kural · 1093
Ch 110 — Recognition of the Signs
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

“She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love”

என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

Love
Kural · 1094
Ch 110 — Recognition of the Signs
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

“When I look, she looks down; when I do not, she looks and smiles gently”

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

Love
Kural · 1095
Ch 110 — Recognition of the Signs
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

“She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles”

என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

Love
Kural · 1096
Ch 110 — Recognition of the Signs
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

“Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood”

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

Love
Kural · 1097
Ch 110 — Recognition of the Signs
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

“Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers”

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

Love
Kural · 1098
Ch 110 — Recognition of the Signs
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

“When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me”

யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

Love
Kural · 1099
Ch 110 — Recognition of the Signs
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

“Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers”

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

Love
Kural · 1100
Ch 110 — Recognition of the Signs
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

“When eyes meet eyes in perfect understanding and shared feeling, spoken words become unnecessary and serve no purpose.”

கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

Love
Kural · 1101
Ch 111 — Rejoicing in the Embrace
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

“All the joys that the five senses can experience—seeing, hearing, tasting, smelling, and touching—are found fully present in the beloved whose beauty and grace captivate completely.”

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

Love
Kural · 1102
Ch 111 — Rejoicing in the Embrace
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

“The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure”

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

Love
Kural · 1103
Ch 111 — Rejoicing in the Embrace
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

“Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?”

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

Love
Kural · 1104
Ch 111 — Rejoicing in the Embrace
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

“From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?”

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

Love
Kural · 1105
Ch 111 — Rejoicing in the Embrace
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

“Each varied form of joy the soul can wish is found”

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

Love
Kural · 1106
Ch 111 — Rejoicing in the Embrace
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

“The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them”

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Love
Kural · 1107
Ch 111 — Rejoicing in the Embrace
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

“The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity)”

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

Love
Kural · 1108
Ch 111 — Rejoicing in the Embrace
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

“To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze”

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

Love
Kural · 1109
Ch 111 — Rejoicing in the Embrace
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

“Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust”

ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

Love
Kural · 1110
Ch 111 — Rejoicing in the Embrace
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

“As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)”

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

Love
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.