All themes
Theme

Wealth

50 Kurals on Wealth.

Kural · 221
Ch 23 — Giving
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

“True giving means helping someone who has nothing and cannot pay you back. Giving to others who can return the favor is just an exchange, not real charity.”

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

CompassionWealth
Kural · 222
Ch 23 — Giving
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

“Taking from others is wrong, even if people say it is acceptable. Giving to others is right, even if there is no reward for it.”

பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

CompassionWealth
Kural · 223
Ch 23 — Giving
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

“A truly noble person gives to others before they have to say 'I have nothing.' They share even when their own resources are limited.”

யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

CompassionWealth
Kural · 224
Ch 23 — Giving
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

“Being asked for help feels uncomfortable only until you see the happy face of the person you helped. Once you see their joy, the discomfort disappears.”

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

CompassionWealth
Kural · 225
Ch 23 — Giving
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

“It takes strength to endure hunger yourself. But it takes even greater strength to help someone else who is hungry.”

தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

CompassionWealth
Kural · 226
Ch 23 — Giving
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

“Helping people who are truly hungry is the best way to store your wealth for the future. When you feed those in need, you are actually investing your money wisely.”

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

CompassionWealth
Kural · 227
Ch 23 — Giving
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

“When you share your food with others regularly, you will never go hungry yourself. Generosity protects you from real need.”

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

CompassionWealth
Kural · 228
Ch 23 — Giving
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

“People who hoard their wealth without sharing, and then lose it all, do not understand the joy that comes from helping others.”

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

CompassionWealth
Kural · 229
Ch 23 — Giving
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

“Keeping everything for yourself and refusing to share is worse than begging for food. This includes eating alone because you fear sharing will reduce your savings.”

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

CompassionWealth
Kural · 230
Ch 23 — Giving
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

“Nothing is more painful than death, the poet says. Yet being unable to help poor people can feel even worse.”

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

CompassionWealth
Kural · 751
Ch 76 — Way of Accumulating Wealth
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

“Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance”

ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

Wealth
Kural · 752
Ch 76 — Way of Accumulating Wealth
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

“All despise the poor; (but) all praise the rich”

பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

Wealth
Kural · 753
Ch 76 — Way of Accumulating Wealth
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

“The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)”

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்

Wealth
Kural · 754
Ch 76 — Way of Accumulating Wealth
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

“The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness”

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

Wealth
Kural · 755
Ch 76 — Way of Accumulating Wealth
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

“(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love”

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

Wealth
Kural · 756
Ch 76 — Way of Accumulating Wealth
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

“The spoils of slaughtered foes; these are the royal revenues”

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

Wealth
Kural · 757
Ch 76 — Way of Accumulating Wealth
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

“The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth”

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

Wealth
Kural · 758
Ch 76 — Way of Accumulating Wealth
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

“An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top”

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

Wealth
Kural · 759
Ch 76 — Way of Accumulating Wealth
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

“Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it”

ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

Wealth
Kural · 760
Ch 76 — Way of Accumulating Wealth
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

“To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)”

சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

Wealth
Kural · 931
Ch 94 — Gambling
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

“Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook”

வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

Self-ControlWealth
Kural · 932
Ch 94 — Gambling
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

“That they may good obtain, and see a prosperous day? Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred?”

ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

Self-ControlWealth
Kural · 933
Ch 94 — Gambling
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

“If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands”

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

Self-ControlWealth
Kural · 934
Ch 94 — Gambling
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

“There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation”

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

Self-ControlWealth
Kural · 935
Ch 94 — Gambling
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

“Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)”

சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

Self-ControlWealth
Kural · 936
Ch 94 — Gambling
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

“Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world”

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

Self-ControlWealth
Kural · 937
Ch 94 — Gambling
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

“To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character”

சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

Self-ControlWealth
Kural · 938
Ch 94 — Gambling
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

“Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)”

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

Self-ControlWealth
Kural · 939
Ch 94 — Gambling
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

“The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning”

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

Self-ControlWealth
Kural · 940
Ch 94 — Gambling
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

“As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it”

பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

Self-ControlWealth
Kural · 941
Ch 95 — Medicine
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

“If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease”

மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

Wealth
Kural · 942
Ch 95 — Medicine
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

“No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested”

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

Wealth
Kural · 943
Ch 95 — Medicine
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

“If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul”

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

Wealth
Kural · 944
Ch 95 — Medicine
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

“(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)”

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

Wealth
Kural · 945
Ch 95 — Medicine
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

“There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable”

மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

Wealth
Kural · 946
Ch 95 — Medicine
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

“As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously”

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

Wealth
Kural · 947
Ch 95 — Medicine
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

“He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)”

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

Wealth
Kural · 948
Ch 95 — Medicine
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

“Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)”

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

Wealth
Kural · 949
Ch 95 — Medicine
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

“The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)”

மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Wealth
Kural · 950
Ch 95 — Medicine
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.

“The practice of medicine rests on four essential pillars: the patient, the physician, the medicine itself, and the caregiver who assists. Each of these four dimensions requires its own careful attention and understanding.”

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

Wealth
Kural · 1001
Ch 101 — Wealth without Benefaction
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

“He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)”

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

WealthEthics
Kural · 1002
Ch 101 — Wealth without Benefaction
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

“He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon”

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

WealthEthics
Kural · 1003
Ch 101 — Wealth without Benefaction
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

“A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame”

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

WealthEthics
Kural · 1004
Ch 101 — Wealth without Benefaction
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

“What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?”

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

WealthEthics
Kural · 1005
Ch 101 — Wealth without Benefaction
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

“Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches”

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

WealthEthics
Kural · 1006
Ch 101 — Wealth without Benefaction
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

“He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth”

தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

WealthEthics
Kural · 1007
Ch 101 — Wealth without Benefaction
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

“The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband”

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

WealthEthics
Kural · 1008
Ch 101 — Wealth without Benefaction
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

“The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town”

பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

WealthEthics
Kural · 1009
Ch 101 — Wealth without Benefaction
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

“To heap up glittering wealth, their hoards shall others take”

பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

WealthEthics
Kural · 1010
Ch 101 — Wealth without Benefaction
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

“The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)”

புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

WealthEthics
Thirukkural Wisdom

Ancient Tamil wisdom — made simple, practical and useful for the modern world, in your own language.

Disclaimer

This application provides educational explanations of the Thirukkural. English meanings and AI-assisted explanations are intended to make the text easier to understand. Classical texts can have multiple valid interpretations.

Thirukkural Wisdom for the World·Timeless Tamil couplets for global minds·© 2026
Choose your language
Tamil & English are always shown · pick a third language

Every Kural is presented in Tamil and English by default. If you'd like a third language alongside, choose one below. You can change or remove it anytime.

You can change this anytime from the globe button in the header.